நானும் என் பாடல்களும் - 4


பல்லவி:


விழியெனும் வில்லால் காதல் தொடுத்தவளே..

மௌனமொழிப்  பேசி இதயம் பறித்தவளே..


மழை கொண்ட மேகமாய் 


வான் வெளி சுற்றித் திரிந்தேன்..


குளிர் தென்றலாய் நீ 


உரசிடப்  பெருந்தூறலாய் பொழிந்தேன்..


துள்ளித்  துள்ளிக் குதிக்கிறேன்..


அடிக்கடி என் பெயர் மறக்கிறேன்..





சரணம் 1:


இரவுகள் உன்னால் நீளுதடி..


கனவுகள் களவுப் போனதடி..


உன் வாசம் கொண்ட காற்று மட்டும் 


சுவாசமாய் என்னுள் நுழையுதடி..


புதிதாய்ப் பிறந்தேன் காதலால்..


உலகம் மறந்தேன் ஆதலால்..





சரணம் 2:


பெண்ணவள் பார்த்ததும் இதயம் 


இறக்கை விரிக்குதே..


என் ஒவ்வொரு செல்லிலும் 


அவள் முகம் சிரிக்குதே..


கால்களும் சாலை மறந்ததே..


காற்றிலும் பாதை வரைந்ததே..


ஓவியப் பெண்ணே ஓடி விடாதே..


என் உலகம் உன் பின்னே மறந்துவிடாதே.. 






Comments