நானும் என் பாடல்களும் - 3


பாடல் வரிகளை படித்த உடனே அது எந்த சூழ்நிலைக்காக எழுதப்பட்டது என்று நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள்... 



பல்லவி:


காமன் எழுதிய கவிதையே..

தேகம் முழுவதும் இளமையே...


சூழ்நிலையும் சூடானதே...


மனநிலையும் தடுமாறுதே...


போதவில்லையடி என் விழிகளும்..


போதையேற்றுதடி உன் வாசமும்...






சரணம் 1:


அங்கம் மறைத்த ஆடைகளுக்கு விடுதலை கொடு..


கொஞ்சம் ஒட்டி நிற்கும் வெட்கத்தை துரத்தி விடு...


சொர்க்க வாசல் திறந்து வைத்த வாலிபத்தை கையில் எடு..


உன்னில் என்னை வாங்கி கொண்டு இன்பத்தின் உச்சம் தொடு..


மலர்ந்து நிற்கும் பெண்மையே...


கலந்து செய்வோம் புதுமையே...





சரணம் 2:


வளைந்து நிற்கும் இடையினிலே தொலைத்துவிட்டேன் கண்ணை...


கனிந்து கிடக்கும் கழுத்தின் கீழே புதைத்து விட்டேன் என்னை..


எண்ணிக்கை மறந்து போனதடி இதயத்துடிப்பும்...


இருந்தும் மனம் வேண்டுதடி இந்த இன்ப வெடிப்பும்...


வந்துவிடு என் அருகே...


வாரிக்கொள்கிறேன் என் அழகே...





Comments