கடந்த வருடம் தான் முதன் முதலாக புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.. சென்ற புத்தக காட்சிக்கு முன்பு வரை நான் புத்தகங்களை வெளியில் வாங்கி படித்ததில்லை.. எனது சொந்த ஊரில் உள்ள நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகங்களை மட்டுமே வாசித்து வந்தேன்.. நூலகத்தில் நான் எடுக்கும் புத்தகங்கள் மூன்று தான்.. ஆனால் அங்குள்ள அனைத்து புத்தகங்களையும் எடுத்து பார்த்து விடுவேன்.. அப்படி பார்ப்பதில் ஏதோ ஒரு ஆனந்தம்.. இப்படிப்பட்ட எனக்கு இப்படி புத்தக மலைகளுக்கு நடுவில் நிற்பது எத்தனை ஆனந்தம் என்று சொல்ல வேண்டியது இல்லை.. அதனால் அடுத்த புத்தக கண்காட்சியை ஆவலுடன் எதிர் பார்த்து கிடந்தேன்.. ஆனால் புத்தக கண்காட்சிக்கு முதல் நாள் செல்ல முடியாதபடி தல அஜித் தடுத்து விட்டார். அதனால் மறுநாளே செல்ல முடிந்தது.. பொருளாதார பற்றாக்குறையால் வாங்க நினைத்திருந்த சில புத்தகங்களை வாங்க முடியவில்லை.. அடுத்த முறையாவது இதை தவிர்க்க நினைக்கிறேன்.. பார்ப்போம்.. இந்த புத்தககண்காட்சியில் வாங்கிய சில புத்தகங்கள்.
உணவின்
வரலாறு - பா.ராகவன்
இந்த
புத்தகத்தை நான் வாங்கிய முதல் காரணம் பா.ராகவன் அவர்கள். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். விறுவிறுப்பான எழுத்துக்கு சொந்தக்காரர்.
நாட்டுக் கணக்கு - சோம.வள்ளியப்பன்
கச்சத்தீவு
- ஆர்.முத்துக்குமார்
காவி நிறத்தில் ஒரு காதல், சிகரங்களை நோக்கி - வைரமுத்து
கிமு.கிபி - மதன்
ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா
மாற்று சினிமா - கிராஃபியன் ப்ளாக்
சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்
Comments
Post a Comment