கவிதை பேசுவோம் (7)


உதவி இயக்குனர்களுக்கு 



ஒரு திரைப்படம் வெளி வந்து வெற்றி பெற்றால் அந்த படத்தின் இயக்குனரின் அறிவுத் திறமையை வியந்து புகழ்வோம்.. ஆனால் அதன் பின் ஒளிந்து கிடக்கும் பல உதவி இயக்குனர்களின் உழைப்பு கேட்பாரின்றி கிடக்கிறது... தான் நேசிக்கும் சினிமாவில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற எதிர்கால நம்பிக்கையோடும் விடா முயற்சியோடும் ஓடிக் கொண்டிருக்கும் பல உதவி இயக்குனர்களுக்கு இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்....



கனவுகள் விதைத்து காட்சிகள் வளர்க்கிறோம்...

பொருளாதார பூதத்தின் பிடிதனில் அறைபடுகிறோம்...

வெள்ளித்திரை தொட்டுவிட வேதனை சுமக்கிறோம்...

அவமானங்கள் அலைக்கழிக்க உதாசினங்கள் உயிர்பிழிய 

தனிமை நொடிகளில் இரவின் மடி நனைக்கிறோம்...

அடித்தாலும் உதைத்தாலும் தாய் பிரிய மறுக்கும் 

சேயாய் சினிமாவின் பாதம் தொடர்கிறோம்...
காரணம்....
என்றேனும் ஒரு நாள்
இருட்டறையில் எழும் கைத்தட்டலால்
வாழ்வு வெளிச்சம் பெரும் என்ற நம்பிக்கையில்...






Comments