கவிதை பேசுவோம் (6)




இன்னுமொரு காதல் தோல்வி கவிதை









உயிர் பறித்துச் சென்ற காதலியே...


ரணத்தில் வழியும் ரத்தம் காயலையே...

வெறும் சதைப் பிண்டமாய் என்னை செய்து விட்டாய்...

கல்யாணச் சந்தையில் இன்னொருவன் கரம் புகுந்து விட்டாய்..

நாடி நரம்பெல்லாம் கொதிக்குதடி...

கண்ணீர் வற்றிய கண்களும் வலிக்குதடி...



காதலின் மடிசுகம் கேட்டதில்லை..


கன்னி நீ என் விழிகளில் விழும் வரை..

அன்னைக்கு மாற்று என உன்னை நினைக்க வைத்தாய்...

உணர்வுகள் கரையும் தருணத்தில் என்னை உடைத்துவிட்டாய்..

உன் பாதச் சுவடுகள் பார்த்து மகிழ்ந்தவனை

பாவக் குழிதனில் தள்ளி புதைத்து விட்டாய்...

தேவதையே...

தெரிந்துதான் செய்தாயா இந்த பிழையை...



உன்னோடு ஒன்றாக பயணித்த பாதைகளை


தனியனாய் நான் தாண்ட நினைக்கையில்

நிழலற்ற நெறிஞ்சி முள் ஒன்று

என் நெஞ்சம் கீறிப் பார்பதென்னவோ..?

விடைகளை தொலைத்து நிற்கும் வினாக்கள் போல

மிச்சமிருப்பதென்னவோ காலம்

ஏதுமற்ற என் காதல் மட்டுமே...

வலி தந்து சென்ற என் கிளியே..

இனி இருள் மட்டும் தான் எனக்கு முடிவே...!





Comments