என் ரகசியமான ரணங்கள்...!






எழுத்து என்ற வலை தளத்தில் ரமணி எனும் புனைப் பெயரில் நான் எழுதிய ஒரு கவிதை...





*  என் உணர்வுகளுடன்

    உறைந்து போனவளே...!

    நீயின்றி நான் கழித்த

    என் இறந்த காலங்கள்

    இதோ உனக்காக....!



*  வறுமையின் மடியில் 

    நான் மடிந்து கொண்டிருந்ததை

   உணராமல் உன் மடித்தேடிய

   என் மடமையை நினைத்து

   சிரித்துக் கொண்டேன்

    சில காலம்....!



*  கலந்துரையாடிய

   என் கல்லூரித் தோழர்களுடன்

   என் காதலை காவியமென

   சொல்லிக் கொண்டேன்

   சில காலம்...!



*  உறக்கத்தில் உலா வரும்

  உன்னைப் பற்றியக்

  கனவுகளுக்காக சிலாகித்து

  காந்திருந்தேன் சில காலம்....!



*  உன் எழுத்துக்கள்

   அடங்கிய ஏடுகளை

   தடவிப் பார்த்து

   தத்தளித்தேன் சில காலம்...! 



*  உன் கரங்களில்

   வாழ்ந்த வளையல்களை

   முகர்ந்தது பார்த்து

   மோட்சம் பெற்றேன்

   சில காலம்....!



*  "உன்னை பாதைகளில்

   பார்த்து விட மாட்டோமா...?"

   என்று பதைபதைத்துக்

   கிடந்தேன் சில காலம்....!



*   "அவள் மனதின் எங்கேனும்

    ஒரு மூலையில் நான்

   படிந்திருப்பேனா?"

   என்று நினைத்து

   நித்திரை இழந்து

  திரிந்தேன் சில காலம்...!



*  வெட்கமின்றி கூறுகிறேன்....!

   காதல் ஒரு தீ...!

  அதை வெந்த பின்பே

  தெரிந்து கொண்டேன்....!



Comments

Post a Comment