சில உளறல்கள்...!


* அன்பின் அர்த்தமதை அன்னைக்கு அடுத்து

  எனக்கு காட்டியவளே....!!



* என் சிந்தையின் ஒவ்வொரு செல்லிலும் அமர்ந்து

  நாளும் எனை சிறைபிடிப்பவளே...!!

  நலமா நீ.....?

  நம்புகிறேன் நலம் என்று....!!



* தெரியுமா உனக்கு....??

   உன் உன்பிற்கு அடிமையான இந்த

  ஆடவனின் அவஸ்தைகள்....!!

  கேள்....!!



* உன்னோடு உரையாடாமல் இருக்கும்

  என் ஒவ்வொரு நொடியும்

  சத்தமின்றி ரத்தம் சிந்துகின்றன...!!



* மற்றவர்கள் பார்த்துவிடுவார்கள் என்ற

  பயத்தில் அழுகையைக் கூட

  புதைத்துக் கொள்கிறேன் என்னுள்....!!

  என் உதடுகளின் உதவியோடு.....!!



* படுக்கையில் நான் கிடக்கும் பொழுது

   உன் இனிய கனவுகள் வந்து

  கண்ணீரால் என் தலையணையை

  ஈரமாக்கிச் செல்கின்றன....!!



* தனிமையில் நொடிகணம் இருந்தாலும்

  தகிக்கிறது என் உள்ளம்...!!

  எங்கே தற்கொலை செய்து

  கொள்வேனோ என்று....!!



* பயப்படாதே...!!

  பாதை மாறமாட்டான் இந்த

  பைத்தியக்காரன்..!!



* இப்பொழுது தான் எனக்கே தெரிகிறது...!!

  என் உள்ளம் கொண்டிருக்கும்

  உன் மீதான என் அன்பினை....!!



* எட்ட நின்றாலும் என் எண்ணங்கள்

  என்றும் உன் வசமே......!!

  ஆம்..!

  உன்னை மறக்கும் நொடி தான்

 என் மரணம்.....!!



* உன்னோடு உரையாடிய அந்த

  ஒவ்வொரு நொடியும்

  என் இதயத் துடிப்போடு

  இன்னமும் இருக்கிறது....!!



* என் ஒவ்வொரு விடியலும்

  உன் நினைவோடு தான்

  தொடங்குகின்றன.....!!

  என் ஒவ்வொரு இரவும்

  உன் நினைவோடு தான்

  உறங்குகின்றன...!!



* நீ அறிமுகமான அந்த நொடி

  எனக்குத் தெரியாது பெண்ணே....!!

  நீ இப்படி வார்த்தைகளாய் என்னுள்

 வடிவம் பெறுவாய் என்று.....!!



* ஒரு நொடியேனும் எண்ணிப் பார்...!!

  அழகான உன் அன்பில்

  தொலைந்து போன என்னை...!!



* இப்படிக்கு...

 உன் நினைவுகளில் பிரிவினை மறப்பவன்....!!

Comments

Post a Comment