கவிதை பேசுவோம் ( 1 )




எழுத்து எனும் வலைத்தளத்தில் நான் எழுதிய சில கவிதைகள்....





-----------------------------------------------------------------------------


குறுஞ்செய்திகள் 



ஆண்டுகள் 

பல

ஆனபொழுதும்

இன்றும்

என்

அலைபேசியில்

வாழ்ந்து கொண்டுதான்

இருக்கின்றன..

smiley உடன்

நீ

அனுப்பிய

குறுஞ்செய்திகள்...!!

------------------------------------------------------------------------------


ரிங்க்டோன்  



தப்பு தப்பாக 

நீ

பாடிய

அந்த

தமிழ் பாடல்தான்

இன்னும் இருக்கிறது...

என்

அலைபேசியின்

ரிங்க்டோனாக....

-------------------------------------------------------------------------------


முத்தம் 



உன்னிடம் 

முத்தம்

பெற

முயலும்

போதெல்லாம்

என்

உறக்கத்தை

கலைத்து

விடுகின்றன

பாழாய் போன

கொசுக்கள்....!

-------------------------------------------------------------------------------


கவிதைக்கு அழகு பொய் 



பெண்ணே....! 

மண் தரைக் கூட

நீ நடந்தால்

மலர்த் தரை

ஆகிறது....!

இப்பொழுது

தெரிகிறதா.....?

கவிதைக்கு அழகு

பொய் தான் என்று.....!











Comments