தமிழ் தாயே...!!


* தலைமுறை பல தாண்டியும் தன்னிலை மாறாத 


  எம் தமிழன்னையே...!


* காலமெனும் ஓடையில் கரைந்து போன 


  பல பழமைகளுக்கு இடையிலும் 


  உன் பளபளப்பு இன்னும் குறையவில்லையே...!!


* கல் தோன்றா மண் தோன்றா காலத்திற்கு 


  முன் தோன்றிய உன்னில் கருத்தரிக்க 


  நாங்கள் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்...!!


* உன்னை உச்சரிக்கும் பொழுது நாவில் எழும் 


  தித்திப்பை மிஞ்சும் இனிப்புப்பண்டமும் 


  உண்டோ வேறெங்கும்..!!


* உன்னோடு காதலாகிதான் எம் முன்னோர்கள் 


  அளித்துச் சென்றார்கள்   சில 


  நல்லொழுக்க இலக்கியங்களை...!!


* தன்னை நாடும் வறியவர்க்கு 


  வாழ்வளிக்கும் வள்ளல் நீ..!


  ஆனால் சகட்டு மேனிக்கு சிலர்


  பிதற்றுகிறார்கள் இங்கே..!!


* அழிந்து வருகிறாயாம் நீ...!!


  கரைந்து போகிறதாம் உன் சிறப்பு...!!


  எத்தனை மூடத் தனம் வேண்டும்


  இதனை உரைப்பதற்கு...!!


* இன்றும் உன்னில் கவிதை பேசினால் 


  கைதட்டல்கள் வானைப் பிளக்கும்...!!


  கூட்டம் மயிர்கூச்செறியும்...!!


* அயல் மொழி வந்துவிட்டால் 


  எங்கள் உயிர்மொழி நீ 


  இறந்து விடுவாயா என்ன..?


* காலத்தால் நீ நிச்சயம் மாறப்போவதில்லை..


  ஆனால் காலத்தை மாற்றிக்காட்டியவள் நீ..!!


  உன் கம்பீரத்தின் நிழலில் தான் நாங்கள் எல்லோரும்...!!


* எங்கும் நீயே...!! எங்கள் தமிழ் தாயே...!!


Comments

  1. மெய் சிலிர்க்கும் கவிதைக்கு நன்றி...
    அடுத்தவர்கள் பேசும் தமிழுக்கு கை தட்டுவது மட்டும் போதாது.. ஒவ்வோருவரும் தமிழில் பேசுவதை பெருமையாக எண்ணினால் இன்னும் நலமாக இருக்கும்..

    ReplyDelete

Post a Comment